search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை
    X

    தீயணைப்பு குழுவினர் தீ பாதுகாப்பு போலி ஒத்திகை காட்சி செய்து காட்டிய போது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூர் அருகே பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை

    • நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார்.
    • தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் தீ தடுப்பு ஒத்திகை காட்சி செய்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே தரணி இன்டர்நேஷனல் பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார தீ தடுப்பு ஒத்திகை, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜீன் பீட்டர் முன்னிலை வகித்தார். இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது, தீ மேலும் பரவாமல் தடுக்கும் வழிமுறைகள், எவ்வாறு தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் தீ தடுப்பு ஒத்திகை காட்சி செய்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×