search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை நீடிப்பு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மழை நீடிப்பு

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது .

    கன மழை

    குறிப்பாக ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணி அளவில் ெதாடங்கிய மழை லோசன தூறலுடன் நின்று போனது.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 45 மி.மீ. மழை பெய்துள்ளது. தம்மம்பட்டி 30, பெத்தநாயக்கன் பாளையம் 19, கெங்கவல்லி 15, ஏற்காடு 7, ஆனைமடுவு 7, ஓமலூர் 6.4, சேலம் 2.9, சங்ககிரி 2.2, எடப்பாடி 2 ,காடையாம்பட்டி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்த படி இருந்தது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொத்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோளசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது.

    அதனை தொடர்ந்து மழை கனமழை பெய்தது. விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது.

    மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இரவில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×