என் மலர்tooltip icon

    ஈரோடு

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பதிலளித்துள்ளார். #Congress #sanjayDutt
    கோபி:

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய்தத் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டம் தோறும் தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு வருகிறோம்.

    இக்கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்கள் தான் மிக முக்கியமானவர்கள். விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறஉள்ளதால், பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளோம்.


    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றப்படுமா? என்ற கேள்விக்கு, நான் பதில் சொல்ல தமிழகம் வரவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி தான் இதுகுறித்து முடிவு செய்வார்கள்.

    மத்திய அரசும், தமிழக அரசும் மக்களை ஏமாற்றி வருகிறது. இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #sanjayDutt
    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம் என்றும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயராக உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #Congress #EVKSElangovan #ParliamentElection
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.

    முன்னதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாறு காணாத வகைகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. யானைப்பசிக்கு சோளப்பொரியை போடுவது போல் மத்திய அரசு ரூ 1.50 மட்டும் குறைத்து உள்ளது.

    தேர்தலுக்கு பயந்தே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை இந்த அரசு தள்ளி வைத்துள்ளது. முதல்வரை கேட்டால் தலைமை செயலாளரை கைகாட்டுகிறார். முதல்வர் சொல்லித்தான் ஒரு தலைமை செயலாளர் செயல்பட முடியும் என கூற விரும்புகிறேன்.


    டெல்லியில் பிரதமரை சந்திக்க முதல்வர் செல்கிறார். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மோடியை சந்திக்க செல்கிறாரே....தவிர பொதுமக்களின் நலனுக்ககாக அல்ல.

    நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம், தினகரன் போன்றவர்கள் நடிகர்களாக நடித்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரலாம். காங்கிரஸ் கட்சி அதை சந்திக்க தயராக உள்ளது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி யாருக்கும் நிரந்தரம் கிடையாது. தலைவர் யார் என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #EVKSElangovan #ParliamentElection #TNAssemblyElection

    அந்தியூர் அருகே வாகனம் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 16). செம்புளிச்சாம் பாளையம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தட கள வீரராகவும் இருந்தார்.

    இவர் கடந்த 22-ந் தேதி அதிகாலை வாக்கிங் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த அடிபட்ட அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அந்தியூர் போலீசில் தினேஷ்குமார் மீது மோதி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை செம்புளிச்சாம்பாளையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்தியூர்-பவானி மெயின் ரோடு செம்புளிச்சாம்பாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் கூடினர். அவர்கள் அங்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. #tamilnews
    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், விவேகானந்தர் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 43). கணவன், மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முத்துலட்சுமி வழக்கம் போல் வேலையை முடித்து கொண்டு ஈரோடு வெட்டு காட்டு வலசு பிரிவில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் முத்துலட்சுமி பலத்த காயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த வழியாக வந்தவர்கள் முத்து லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் முத்து லட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் குறித்து தினகரன் கூறும் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
    ஈரோடு:

    ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ஓ. பன்னீர் செல்வம் தன்னை சந்தித்தாக டி.டி.வி. தினகரன் கூறியிருப்பது தொடர்பாக அமைச்சர் கருப்பணனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:-

    தினகரன் கூறி வரும் கருத்து பற்றி கவலை இல்லை. அதற்கு கருத்து கூறவும் விரும்பவில்லை. ஒவ் வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகின்றனர்.

    கமல்ஹாசன் ஒரு கருத்து கூறுகிறார். தினகரன் ஒரு கருத்து கூறுகிறார். ஆனால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். அவரகளது ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘‘இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’’ என்றார்.

    மழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வருவாய்துறை ஊழியர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் விழிப்புடன் செயல்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் மழை குறித்து அச்சப்படத் தேவையில்லை.ஆற்றில் சாயக்கழிவு நீரை கலக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 சாயப்பட்டறை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    மேலும் இதுகுறித்து புகார் வந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி .ராமலிங்கம் , கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் அருகில் இருந்தனர். #ADMK #TTVDhinakaran #OPanneerselvam
    கடந்த 4-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகேயுள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ல.கள்ளிப்பட்டி, நல்லகவுண்டம்பாளையம், தொட்டிபாளையம், கரட்டடிபாளையம், வெள்ளாங்காட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

    இதற்கான பணியை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வரப்படும்.

    கோப்புப்படம்

    மத்திய அரசின் உதவியோடு அடல் டிங்கர் லேப் எனப்படும் அறிவியல் ஆய்வகங்கள் பள்ளிகளில் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    சீருடைகள் மாற்றத்தில் மாணவர்களின் அளவுகளுக்கு ஏற்ப அந்தந்த ஊர்களில் சமூக நலத்துறையின் மூலமாக பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளுக்கு அளவெடுத்து தைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    கடந்த 4-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் பள்ளி கட்டிங்களை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் மூலம் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை வரும் பொழுது மாணவர்கள் பாதிக்காத வகையில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

    நம்பியூர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கவுந்தப்பாடி அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயிகவுண்டனூர் பாலியபாறை பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 7.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நல்லாம்பட்டி கசிவு நீர் (கீழ் பவானி) வாய்க்கால் மூலம் மாணிக்க வலசு, ஆயிகவுண்டனூர், சிங்க நல்லூர், பெரிய கவுண்டன் வலசு, அணைப்புதூர், வெங்கமேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,7,8 மதகுகள் வழியாக 450 ஏககர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

    வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என கூறி அதை கண்டித்து விவசாயிகளும், பெண்களும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் மண்வெட்டிகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளை சமரசப்படுத்தினர். பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறியதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
    பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் என்பது ஒரே சமயத்தில் மிக மிக கனமழை பெய்யும். யாரும் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கைதான் இந்த ரெட் அலர்ட்.

    இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் உஷாராக இருக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் முடுக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து கலெக்டர் கதிரவன் இன்று காலை ‘மாலை மலர்’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 113 இடங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக (தாழ்வான பகுதிகள்) அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, ஊரகத்துறை போன்ற அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களுக்கு இவர்கள் விரைந்து சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையான பவானிசாகர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. உபரி நீரை திறக்க வாய்ப்புள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பவானி ஆற்றின் கரையோரம் வருவாய்த்துறையினர் முகாம் அமைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.
    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூ.87.80-க்கு விற்கப்பட்டது. இன்று 2.63 குறைக்கப்பட்டு 85.17-க்கு விற்கப்பட்டது.
    ஈரோடு:

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஈரோட்டில் தினமும் உயர்ந்து கொண்டே சென்றது.

    இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு லேசாக மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. உற்பத்தி விலையை குறைத்துள்ள மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2.50 குறைக்கப்படுவதாக அறிவித்திருந்தது.

    அதன்படி விலை குறைக்கப்பட்டது. இதே போல் ஈரோட்டிலும் பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று ரூ.87.80-க்கு விற்கப்பட்டது. இன்று 2.63 குறைக்கப்பட்டு 85.17-க்கு விற்கப்பட்டது.

    இதே போல் நேற்று ஒரு லிட்டர் டீசல் 80.26-க்கு விற்கப்பட்டது. இன்று 2.68 குறைக்கப்பட்டு 77.58-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 காசு 30 காசு என உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் தற்போது 2.60 குறைந்திருப்பது வாகன ஓட்டிகள் மனதில் கொஞ்சம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு அருகே பணியின் போது மயங்கி விழுந்து தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஊட்டி அடுத்த கடப்பாடியை சேர்ந்தவர் யோக பிரியா (வயது 43). இவருக்கு திருமணமாகி கடந்த 10 வருடத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.

    ஈரோடு நேதாஜி நகர் மாணிக்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று வழக்கம்போல் ஆஸ்பத்திரியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்தியில் அனுமதித்தனர்.

    அவரை டாக்டர்கள் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே வி ராமலிங்கம், கே எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கேசி கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 343 பெண் பயனாளிகளுக்கு மானிய விலையிலான ஸ்கூட்டர்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்,


    மறைந்த ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக பாலித்தீன் பயன்படுத்தாத ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் கல்வித்துறையை பொறுத்தமட்டில் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய சீருடையை நேற்று முதலமைச்சர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

    வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் நான்கு வகையான இலவச சீருடைகள் வழங்கப்படும். 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாத இறுதியில் இலவச சைக்கிள் வழங்கப்படும். 670 பள்ளிகளில் அதிநவீன விஞ்ஞான ஆய்வு கூடமான அடல் லேப் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கணினிமயப்படுத்தவும் ‘யூ டியூப்’ மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறந்த தேசிய தூய்மை பள்ளிகள் தமிழகத்தில் 6 பள்ளிகளும் பாண்டிச்சேரியில் இருந்து பள்ளிகள் மற்றும் குஜராத்தில் ஐந்து புள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழகத்திலுள்ள 54 ஆயிரம் பள்ளிகளும் தூய்மையாக தான் இருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மழைக்காலத்தில் எவ்வாறு பள்ளிக்கு வந்து செல்வது என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையின் தன்மைக்கேற்ப அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
    வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் தொடக்க விழா இன்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதி நவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளது. இது புதுமையான திட்டம் ஆகும்.

    இதன் மூலம் அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்கலாம். மாணவர்கள் பல்வேறு உலக செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

    தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. வரும் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புதிய சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.

    கோப்புப்படம்

    வரும் நவம்பருக்குள் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். மேலும் 9.11,12 ஆகிய அனைத்து வகுப்புகளும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

    இந்த ஆண்டு முதல் பிளஸ்-2வில் 600 மதிப்பெண் எடுத்தாலே உயர் கல்விக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்கி வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் உடனிருந்தார். #ADMK #TNMinister #Sengottaiyan #smartclass
    ×