என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் சாலை மறியல்
Byமாலை மலர்5 Oct 2018 4:37 PM GMT (Updated: 5 Oct 2018 4:37 PM GMT)
கவுந்தப்பாடி அருகே கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயிகவுண்டனூர் பாலியபாறை பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 7.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லாம்பட்டி கசிவு நீர் (கீழ் பவானி) வாய்க்கால் மூலம் மாணிக்க வலசு, ஆயிகவுண்டனூர், சிங்க நல்லூர், பெரிய கவுண்டன் வலசு, அணைப்புதூர், வெங்கமேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,7,8 மதகுகள் வழியாக 450 ஏககர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என கூறி அதை கண்டித்து விவசாயிகளும், பெண்களும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் மண்வெட்டிகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளை சமரசப்படுத்தினர். பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறியதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆயிகவுண்டனூர் பாலியபாறை பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை 7.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லாம்பட்டி கசிவு நீர் (கீழ் பவானி) வாய்க்கால் மூலம் மாணிக்க வலசு, ஆயிகவுண்டனூர், சிங்க நல்லூர், பெரிய கவுண்டன் வலசு, அணைப்புதூர், வெங்கமேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 6,7,8 மதகுகள் வழியாக 450 ஏககர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என கூறி அதை கண்டித்து விவசாயிகளும், பெண்களும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் ரோட்டில் நாற்றுகள் மண்வெட்டிகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளை சமரசப்படுத்தினர். பொதுப்பணிதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்போம் என போலீசார் கூறியதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X