search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடிப்பாக்கத்தில் வீட்டில் முதியவர் வெட்டிக்கொலை
    X

    மடிப்பாக்கத்தில் வீட்டில் முதியவர் வெட்டிக்கொலை

    • கந்தப்பெருமாள் திடீரென இறந்துவிட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
    • மடிப்பாக்கம் போலீசார் உடலை கைப்பறி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் அடுத்த உள்ளகரம், பெரியார் தெருவில் வசிப்பவர் அர்ஜுன். கூலித்தொழிலாளி. இவரது சொந்த ஊர் கடலூர் ஆகும். இவருடன் அவரது தாயின் அண்ணனான கந்தப்பெருமாள்(வயது62) என்பவர் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் அர்ஜுன் ஆதம்பாக்கத்தில் உள்ள உறவினர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் கந்தப்பெருமாள் திடீரென இறந்துவிட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதையடுத்து உறவினர், அர்ஜுன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் கந்தபெருமாள் பலத்த வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    மேலும் தகவல் தெரிவித்த உறவினர் அர்ஜூன் மாயமாகி இருந்தார்.

    மடிப்பாக்கம் போலீசார் உடலை கைப்பறி விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான அர்ஜுனை போலீசார் தேடிவருகிறார்கள். அவர் சிக்கினால் தான் கந்தப்பெருமாள் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

    Next Story
    ×