search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில் தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    சிவகிரியில் தி.மு.க. பொதுக்கூட்டம்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி.ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., சிவகிரி பேரூர் தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வாசு. வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளருமான டாக்டர் செண்பகவிநாயகம் வரவேற்று பேசினார்.

    தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சரவணன், தலைமைக் கழக பேச்சாளர் இஸ்மாயில், முத்துசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் மருதப்பன், அவைத் தலைவர் துரைராஜ், துணைச்செயலாளர்கள் முனியாண்டி, முத்தையா, ராமுத்தாய், பொருளாளர் பரமசிவன், மாவட்ட பிரதிநிதிகள் மாரித்துரை, கந்தவேல், ஒன்றிய பிரதிநிதிகள் மாடசாமி, சி.எஸ்.மணி, சுந்தரவடிவேலு, ராமச்சந்திரன், அழகுவேல், மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுந்தரவடிவேலு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசு யூனியன் சேர்மன் பொன் முத்தையாபாண்டியன், பேரூர் செயலாளர் செண்பகவிநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×