search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை: தஞ்சை மாநகரில் குவிந்த 250 டன் குப்பைகள்  சேகரித்து அப்புறப்படுத்திய தூய்மை பணியாளர்கள்
    X

    தஞ்சையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி லாரியில் ஏற்றும் தூய்மை பணியாளர்கள்.

    தீபாவளி பண்டிகை: தஞ்சை மாநகரில் குவிந்த 250 டன் குப்பைகள் சேகரித்து அப்புறப்படுத்திய தூய்மை பணியாளர்கள்

    • பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவு குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்
    • சுமார் 250 டன் குப்பைகள் சேகரித்து 40 கனரக வாகனங்களில் குப்பைகளை கிடங்கில் கொட்டப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 110 முதல் 120 டன் குப்பை சேரும்.

    இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவது வழக்கம். தற்போது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன.

    நேற்று தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

    இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவுகள் குவிந்தன. இது தவிர சாலையோர கடைகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. அதில் தேவையில்லாத பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் சாலையோரம் குவிந்தன.

    இப்படி பட்டாசு வெடி த்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 110 டன் அளவிற்கு குப்பை சேர்ந்து உள்ளது . அதாவது சுமார் 250 டன் குப்பைகள் குவிந்தன.

    இதனை தொடர்ந்து இன்று காலையில் தஞ்சை மாநகர் முழுவதும் குவிந்திருந்த குப்பைகளை 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் 40 கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன.

    Next Story
    ×