search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட்டார சுகாதார மன்ற கூட்டம்
    X

    கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் பேசினார்.

    வட்டார சுகாதார மன்ற கூட்டம்

    • பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கவுரை.
    • சுகாதார துறையினர் கொரோனா காலங்களில் ஆற்றிய பணி மகத்தானது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக வட்டார சுகாதார மன்ற கூட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார்.

    அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் அஜந்தன் மருத்துவம் மற்றும் சுகாதாரதுறையின் சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும்மருத்துவ சிகிச்சைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

    இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்தினார்.

    அப்போது சுகாதார துறையினர் கொரோனா காலங்களில் ஆற்றிய பணி மகத்தானது தொடர்ந்து சுகாதார துறையினர் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என பேசினார்.

    கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியத்தைசேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்.

    அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இறுதியில் சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×