என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்மாய் பூமிபூஜையில் அழைப்பு இல்லை என கூறி அதிகாரிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதம்
- கண்மாய் பூமிபூஜையில் அழைப்பு இல்லை என கூறி அதிகாரிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைரோடு:
கொடைரோடு அருகே உள்ள ராமராஜபுரம் அரண்மனை குளம் கண்மாய் புனரமைப்பு செய்ய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.61.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணிகளை தொடங்குவதற்காக பூமி பூஜை அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சார்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். அதை தெரிந்துகொண்ட தி.மு.க. பேரூர் செயலாளர் விஜயகுமாருக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூமி பூஜை தொடங்குவதற்கு முன்ன தாக அரண்மனை குளத்தி ற்கு சென்று அங்குள்ள பேரூராட்சி உதவி பொறி யாளர், அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் தி.மு.க. நகர செயலாளராவும் கவுன்சிலருமாக உள்ளேன்.
எனக்கு அழைப்பு இல்லா மல் எப்படி பூமி பூஜை செய்யலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோ ட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் (பொறுப்பு) சவுந்திர பாண்டியன் மற்றும் நிர்வாகி கள், நகரச் செயலாளர் விஜயகுமாரை சமாதானம் செய்தனர். அதன்பிறகு அரண்மனை குளம் கண்மாய் சீரமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பி டதக்கது. பூமி பூஜைகள் நிகழ்ச்சிக்கு வாக்குவாதம் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்