என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினம் தசராவுக்கு வேடப்பொருட்களை தேர்வு செய்வதில் பக்தர்கள் தீவிரம்
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 5-ந் தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.
- விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணியும் வேடங்களுக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.
இதையொட்டி சுவாமி வேடம் அணிபவர்கள் 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர் மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதமிருந்து வருகின்றனர்.
தற்போது விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணியும் வேடங்களுக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்போது உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதியில் வேடமணியும் பொருட்களை வாங்குவதில் பக்தர்கள் தீவிரமாக செயல்படுவதால் வேடத்திற்கு தேவையான பொருட்களை கூட்டம் கூட்டமாக வாங்குகின்றனர்.
சிலர் தசரா குழுவுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்தும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் தற்போது உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதியில் தசரா களை கட்ட தொடங்கி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்