search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெங்கு கொசு விழிப்புணர்வு பிரசாரம்
    X

    டெங்கு கொசு விழிப்புணர்வு பிரசாரம்

    • தண்ணீர் தேங்கினால் அவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.
    • கொட்டாங்குச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப், அம்மிக்கல், ஆட்டுக்கல், ப்ரிட்ஜில் பின்புறம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார பகுதிக ளில் உள்ள கபிஸ்தலம், பண்டாரவாடை, சக்கரா ப்பள்ளி, வீரமா ங்குடி, ஆதனூர், ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் டெங்கு எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு தினந்தோறும் அனைவரும் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் சென்று வீடுகளில் பின்புறம் கொட்டாங்குச்சிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப், அம்மிக்கல், ஆட்டுக்கல், ப்ரிட்ஜில் பின்புறம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க வேண்டும்.

    தண்ணீர் தேங்கினால் அவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பு ஏற்படுத்தும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். இந்த பணிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக், தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து, சுவாமிநாதன் மற்றும் மஸ்தூர்கள் சுகாதார பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×