search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் காங்கிரசார் சாலை மறியல்; 10 பேர் கைது
    X

    தஞ்சை ரெயிலடியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சையில் காங்கிரசார் சாலை மறியல்; 10 பேர் கைது

    • 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
    • தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    மேலும் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்படி தஞ்சை ரெயிலடியில் பொருளாளர் பழனியப்பன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×