search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  காங்கிரஸ் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

    சிவகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி நகர காங்கிரஸ் சார்பாக, நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பழிவாங்கும் உள்நோக்கத்தோடு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது பொய் வழக்கு போடுவதையும், அமைதியாக போராடிய காங்கிரஸ் தலைவர்களை தாக்கிய மத்திய அரசை கண்டித்தும் சிவகிரி பஸ் நிலையம் அருகே சென்ட்ரல் பேங்க் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் சண்முகசுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் உலகநாதன், நகர காங்கிரஸ் துணைத்தலைவர்கள் நாட்டாமை மாணிக்கம், சதானந்தன், மணி, செயலாளர்கள் செந்தில்குமார், மாடசாமி, கணேசன், சின்னக்கண்ணன், வேளியார், மருதப்பன், ஐ.என்.டி.யு.சி. மாடசாமி, டெய்லர் ஆறுமுகம், குட்டி, நிர்வாக குழு சந்திரன், தர்மராஜ்,

    இளைஞர் காங்கிரஸ் மனோ, பாலாஜி மற்றும் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×