search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா
    X

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பெண் ஒருவருக்கு சீதனப்பொருட்கள் வழங்கிய காட்சி


    விளாத்திகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

    • விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்களான தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம், மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தங்கவேல், மருத்துவர் பிரபா, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, நகர செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கொண்டனர்.

    Next Story
    ×