search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
    X

    குழந்தைகள் பாதுகாப்பு திட்ட குழு கூட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

    • சீராப்பள்ளி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
    • கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள், துணைத் தலைவர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கோமதி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குழந்தைகளின் திருமணங்கள், குழந்தைகள் தத்தெடுக்கும் முறை, ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாக்குதல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், இளம் வயது குழந்தை திருமணம் தடுத்தல், கொரோனா தொற்றில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி பெறும் முறை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×