என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அருந்ததியர் குடியிருப்பு பகுதி மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
- சிலுவாம்பட்டி ஊராட்சியில் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு.
- நரிக்குறவ இன மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மை குட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு முதலமைச்சரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி உரை ஆற்றுகிறார். இதை பங்கேற்பதற்காக நாமக்கல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலுவாம்பட்டி ஊராட்சியில்உள்ள அருந்ததியினர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
அங்குள்ள நரிக்குறவ இன மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார். 3.5 சதவீத அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கவினுடன் முதலமைச்சர் கலந்தரையாடினார்.
மேலும் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அதன்பிறகு அவர்களது வீட்டில் முதலமைச்சர் தேநீர் அருந்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்