search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் வாசுகி காலமானார்
    X

    சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் வாசுகி காலமானார்

    • முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளருமான ஆ.வாசுகி உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார்.
    • வாசுகி உடலுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை:

    தியாகியும் முன்னாள் கவுன்சிலருமான டி. ஆண்டியப்பனின் மருமகளும், கொளத்தூர் தொகுதி, 3-வது சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆ.ஆனந்தராமின் மனைவியும், முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளருமான ஆ.வாசுகி உடல் நலக்குறைவால் பெரம்பூர் ராகவன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை காலமானார்.

    அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தகனம் நாளை (ஞாயிற்றுகிழமை) காலை 9 மணிக்கு மேல்பட்டி பொன்னப்பன் தெரு, வியாசர்பாடி, பெரம்பூரில் உள்ள மின்மயானத்தில் நடக்கிறது.

    Next Story
    ×