என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
- வணிகவளாகத்தில் ஒரே நாளில் 8 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதலபாண்டியன் (வயது 40). இவர் அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல அவர் கடையை திறக்க சென்றார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி வியாபாரிகள் கூறியதாவது:-
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்தில் ஒரே நாளில் 8 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கடைகளில் கொள்ளைகள் நடந்து வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்