search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த கடையில் கதவு உடைக்கப்பட்டிருக்கும் காட்சி.

    தூத்துக்குடி மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

    • நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    • வணிகவளாகத்தில் ஒரே நாளில் 8 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதலபாண்டியன் (வயது 40). இவர் அதே பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல அவர் கடையை திறக்க சென்றார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்தது. நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக அவர் தென்பாகம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி வியாபாரிகள் கூறியதாவது:-

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வணிகவளாகத்தில் ஒரே நாளில் 8 கடைகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கடைகளில் கொள்ளைகள் நடந்து வருகிறது. எனவே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×