search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில்  அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
    X

    சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.


    சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

    • சங்கரன்கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், மகாராஜன், நகர் மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், தலைமை கழக பேச்சாளர்கள் கணபதி, லட்சுமணன், ராமசுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அந்தோணி டேனியல், டாக்டர் திலீபன், வழக்கறிஞர் காந்தி குமார், நகர் மன்ற உறுப்பினர் ராமதுரை, நகர அவைத்தலைவர் வேலுச்சாமி, பொருளாளர் ஐயப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் குருசாமி, மாரிச்சாமி, அந்தோணி, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×