search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி
    X

    விழிப்புணர்வு போட்டி

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி

    • விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் தலைவர் வகித்தார்.
    • துணைத் தலைவர் சுதா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    சுவாமிமலை:

    பொது சுகாதாரத்தினை பேணிக்காத்து தூய்மையாக பராமரிக்க, என் குப்பை - என் பொறுப்பு என்பதை வலியுறுத்துவதற்காக தஞ்சாவூர் மாவட்டம், வேப்பத்தூர் பேரூராட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் வேப்பத்தூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, அம்மன்பேட்டை புனித வளனார் உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.

    அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பேரூராட்சி செயல் அலுவலர் கோ. லதாவால் நடத்தப்பட்டது. விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சம்மாள் தலைவர் வகித்தார். துணைத் தலைவர் சுதா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர். ரமேஷ்குமார், உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், . சிவசங்கர், அம்மன்பேட்டை புனித வளனார் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியை தேவசகாயமேரி, அனைத்து பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×