search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிப்பட்டு ஆட்டோ டிரைவர் பலி
    X

    ரெயிலில் அடிப்பட்டு பலியானவர் உடலை போலீசார் மீட்டனர்.

    ரெயிலில் அடிப்பட்டு ஆட்டோ டிரைவர் பலி

    • வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.
    • ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பெருமாளகரம் பட்டத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆறுமுகம் (வயது 49). ஆட்டோ டிரைவர். இவர் இன்று காலை தஞ்சை அருகே குன்னம்- கொரடாச்சேரிக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரெயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தலைமை காவலர்கள் சரவணசெல்வம், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×