search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் மத போதகர் மீது தாக்குதல்- தொழிலாளிக்கு வலைவீச்சு
    X

    களக்காட்டில் மத போதகர் மீது தாக்குதல்- தொழிலாளிக்கு வலைவீச்சு

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (62).
    • பணப்பிரச்சினை தொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்துள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேவியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவஆசீர்வாதம் (62). கிறிஸ்தவ போதகர்.இவருக்கு சொந்தமான வயலில் களக்காடு பஸ் ஸ்டாண்ட் கீழத்தெருவை சேர்ந்த பாண்டியராஜ் (49) விவசாய வேலைகள் செய்தார்.

    இதற்கு தேவஆசீர்வாதம் தனது மகன் மூலம் போன் பேயில் ரூ.7 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அந்த பணம் போதாது என்று பாண்டியராஜ் கூறி வந்தார். இதுதொடர்பாக பாண்டியராஜ், தேவஆசீர்வாதம் மீது களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேவ ஆசீர்வாதம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு 2 பேருடன் வந்த பாண்டியராஜ், தேவஆசீர்வாதத்தை அவதூறாக பேசி, தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜை தேடி வருகிறார்.

    Next Story
    ×