என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு 'தர்ம அடி'
- நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் காயத்ரி(வயது 22).
- காயத்ரி நேற்று இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ் நிலையம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்தவர் காயத்ரி(வயது 22). இவர் ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ் நிலையம் பகுதியில் அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றார்.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் காயத்ரியின் கம்மல் உள்ளிட்ட நகைகளை பறிக்க முயன்றார். உடனே காயத்ரி கத்தி கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோ டிரைவர்கள் மற்றும பொதுமக்கள் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து பெருமாள்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள ஊத்து பகுதியை சேர்ந்த அஜீஸ்(31) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தாக்கியதில் அஜீஸ் காயம் அடைந்தார். இதனால் அவரை போலீசார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்