search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி  அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா
    X

    விழாவில் ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா

    • விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயச்சந்திரன் 9 தங்க மடல்களை பரிசாக வழங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் தங்கப்பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா தொழிலதிபர் ஜெயச்சந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்றது.பள்ளி மேலாண்மை மற்றும் மேம்பாட்டு குழு தலைவர் ஜானகி அம்மாள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வரவேற்று பேசினார்.

    விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயச்சந்திரன் 9 தங்க மடல்களை பரிசாக வழங்கினார்.பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன் ஆகியோரும் பரிசுகள் வழங்கினர்.

    மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போதை விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் தங்கப்பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி னார்.

    விழாவில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம், முனைவர் தவசிமுத்து, வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் ராமஜெயம், தி.மு.க நகர செயலாளர் நவநீத பாண்டியன், அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை தேவமலர் நன்றி கூறினார்.

    Next Story
    ×