search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    தஞ்சையில், விழிப்புணர்வு பேரணி

    • முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இன்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமா னோர் கலந்துகொண்டு ஊட்டச்சத்து, ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேருவதை நான் உறுதி செய்வேன் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    பல்வேறு வழியாக சென்று அறிஞர் அண்ணா மண்டபத்தில் பேரணி முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×