search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
    X

    வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி

    • குடிபோதையில் இரவு வீட்டிற்கு வந்தள்ளார்.
    • இதைக்கண்ட இவரது மனைவி இந்துஜா கணவரை கண்டித்துள்ளார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சீனிவாசன் (வயது 24). இவருக்கு திருமணமாகி இந்துஜா என்ற மனைவி உள்ளார்.இந்த நிலையில் சீனிவாசன் நேற்று இரவு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார்.இதைக்கண்ட இவரது மனைவி இந்துஜா கணவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் வீட்டின் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்துஜா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சீனிவாசன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துமனை கொண்டுவந்து சேர்த்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×