search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
    X

    ஆதித்தனார் கல்லூரியில் உறதிமொழி ஏற்றபோது எடுத்த படம்.

    ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வகுப்பு பாடவேளையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, உதவியாளர்கள் சிலுவை ரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். மேலும் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வகுப்பு பாடவேளையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    Next Story
    ×