search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட அஜய்.

    திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது

    • திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திண்டிவனம் போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் மயிலம் ரோட்டில் உள்ள உணவகத்தின் வெளியே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உணவு வாங்க சென்றுள்ளார். மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கண்ணதாசன் புகார் செய்தார். அதன் பெயரில் திண்டிவனம் போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியது திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியைச் சேர்ந்த அஜய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜய் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×