என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற வாலிபர்
- போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கண்காணிப்பதோடு, அவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே போதை பொருள் விற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கோவை:
கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கண்காணிப்பதோடு, அவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோவை மாநகரில் இதுவரை போதை மாத்திரைகளை விற்றதாக 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து வருகிறார்கள்.
கோவை கோவில்மேடு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரை பொடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு போதை மாத்திரை பொடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இடையர்பாளையம் அருகே உள்ள பாரி நகரை சேர்ந்த சரவணகுமார்(வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் போதை மாத்திரை பொடியை பறிமுதல் செய்தனர். இந்த போதை மாத்திரை பொடி வலி நிவாரணிக்கு பயன்படுத்துவது என்பது தெரியவந்தது.
சரவணக்குமார் உணவு பார்சல் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. மேலும் அங்கு வேலை பார்த்து கொண்டே, போதை மாத்திரைகளை பொடியாக்கி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போதை மாத்திரை பொடிகளை எங்கிருந்து வாங்கி வந்தீர்கள். இதன் பின்னால் யாரெல்லாம் உள்ளார்கள் என விசாரித்தனர். அப்போது அவர் கோவையில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பல்கள் குறித்து பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகி றது.அதனை வைத்து போலீசார் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்க ளை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்