search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவகாமி கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • இதனால் மனமுடைந்த நிலையில் சுரேஷ் வீட்டில் தூக்கு போட்டு இறந்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் அருகே உள்ள பெருமாபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது37) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி(32). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    சுரேஷ் மற்றும் சிவகாமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவகாமி கணவரிடம் கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் சுரேஷ் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுரேஷ் வீட்டின் அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×