search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடு மேய்ப்பதில் தகராறு: விவசாயி வெட்டி கொலை
    X

    கொலை செய்யப்பட்ட குணசேகரன். (அடுத்தபடம்):கொலை நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆடு மேய்ப்பதில் தகராறு: விவசாயி வெட்டி கொலை

    • ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • ஆத்திரமடைந்த முத்துசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரணை வெட்டினார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45).

    விவசாயி. இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் குணசேகரின் ஆடு அதே பகுதியை சேர்ந்த முத்துசெல்வன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் குணசேகரனுக்கும், முத்துசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த முத்துசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரணை வெட்டினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முத்துசெல்வனை தேடி வருகிறார்கள்.

    இது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×