என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடு மேய்ப்பதில் தகராறு: விவசாயி வெட்டி கொலை
- ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- ஆத்திரமடைந்த முத்துசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரணை வெட்டினார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45).
விவசாயி. இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் குணசேகரின் ஆடு அதே பகுதியை சேர்ந்த முத்துசெல்வன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் குணசேகரனுக்கும், முத்துசெல்வனுக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த முத்துசெல்வன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குணசேகரணை வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய முத்துசெல்வனை தேடி வருகிறார்கள்.
இது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்