என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை பேட்டையில் வீட்டில் மயங்கி விழுந்து 4 வயது சிறுமி திடீர் சாவு
Byமாலை மலர்18 Sep 2022 9:05 AM GMT
- சங்கிலி பூதத்தான் டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான்.
திடீர் மயக்கம்
இவர் டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களது மகள் வசந்தி (வயது 4). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்த சிறுமி திடீரென தலை சுற்றுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
பரிதாப சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் திடீர் சாவுக்கான காரணம் குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X