search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை பேட்டையில்   வீட்டில் மயங்கி விழுந்து  4 வயது சிறுமி திடீர் சாவு
    X

    நெல்லை பேட்டையில் வீட்டில் மயங்கி விழுந்து 4 வயது சிறுமி திடீர் சாவு

    • சங்கிலி பூதத்தான் டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான்.

    திடீர் மயக்கம்

    இவர் டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களது மகள் வசந்தி (வயது 4). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தார்.

    இன்று காலை வீட்டில் இருந்த சிறுமி திடீரென தலை சுற்றுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

    பரிதாப சாவு

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    சிறுமியின் திடீர் சாவுக்கான காரணம் குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×