என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்த காட்சி.
செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது
- பாம்பு ரயில்வே டிராக்கை தாண்டி வருவதை பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை செங்கோட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை ரெயில் நிலையத்தின் வளாகத்திற்குள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் மலைப்பாம்பு சுற்றிதிரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாம்பு ரயில்வே டிராக்கை தாண்டி வருவதை பார்த்த பணியாளர்கள் செங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலையஅலுவலர் சிவசங்கரன் தலைமையில் சிறப்பு அலுவலர் மாரியப்பன், வீரர்கள் செந்தில்குமார், வினோத்குமார், இசக்கி துரை ஆகியோர் விரைந்து 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பான பையில் போட்டனர்.
பின்னர் மலைப்பாம்பை செங்கோட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப் பாம்பை காட்டுப்பகுதியில்கொண்டு விட்டனர்.
Next Story