search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
    X

    மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

    • சேலம், வீராணம் அருகே இன்று அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி , தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
    • இதில் சின்னதாயிக்கு , கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் வீராணம் அருகே உள்ள சின்னமனூர் அடுத்த வீமனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைகவுண்டர்.இவரது மனைவி சின்னத்தாயி (வயது 95) இந்த தம்பதிகளுக்கு 7 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.மேலும் 12 பேரன்களும் 9 பேத்திகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் குழந்தை கவுண்டர் ஏற்கனவே இறந்துவிட்டார். சின்னத்தாயி காற்றுக்காக நேற்று இரவு கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டு இருந்தார்.இன்று அதிகாலை உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சின்னத்தாயின் காலைப் பிடித்துக் கொண்டு வாயை பொத்தி கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி , தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதில் சின்னதாயிக்கு , கழுத்தில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த தகவலின்பேரில் வீராணம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சின்னத்தாய்ன் பேரன்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×