search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி பகுதியில்  மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 3 பேர் கைது- 82 மதுபாட்டில்கள் பறிமுதல்
    X

    சிவகிரி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 3 பேர் கைது- 82 மதுபாட்டில்கள் பறிமுதல்

    • ராஜேந்திரனிடமிருந்து 61 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமியை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

    சிவகிரி, ஆக.15-

    சிவகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் சிவகிரி, ராயகிரி, விஸ்வநாதப்பேரி போன்ற முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ராயகிரி பஸ் நிறுத்தம் அருகே தெற்கு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது - 67) என்பவர் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற இவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது இவரிடமிருந்து 61 மதுபாட்டில்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

    இதைப்போன்று சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமி (வயது - 50) என்பவர் அவரது வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசார் இவரை பிடித்து சோதனை செய்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    சிவகிரி பிராட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சிவகாமி (வயது 60). இவர் மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாரை கண்டவுடன் தப்பித்து செல்ல முயன்றார். இவரை பிடித்து சோதனை செய்ததில் 9 மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த 9 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மொத்தம் சிவகிரி பகுதியில் 82 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 3 பேர் மீதும் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் நவமணி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×