என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே ரூ.40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 3 பேர் கைது
- அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்
- 16 கிராம் எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நேற்று சிறுமுகை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் சேரன் நகர் 2 பகுதியை சேர்ந்த ெசபாஸ்டியன் (21), சிறுமுகை அருகே அன்னூர் சாலை டி.ஆர்.எஸ். ஹவே சிட்டி பகுதியை சேர்ந்த மார்சல் (22), சேரன் நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (19) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்களிடம் 16 கிராம் எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூர் பகுதியில் இருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.
மேலும் இதனை இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஒன்றாக சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமுகை போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்