search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர் யூனியன் நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
    X
    தொழிலாளர் யூனியன் நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ்களை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்

    காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நெல்லை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் பதவி நியமன ஆணை வழங்கும் விழா மகாராஜநகரில் உள்ள  நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் எழிலரசி தலைமையில் நடைபெற்றது. 

    இதில் மாநகர் மாவட்ட தலைவர் காவேரி பரிந்துரைப்படி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் இசக்கிமுத்து என்ற அய்யப்பன், முகமது இக்பால், சுப்பையா, சிவலிங்கம், சுப்பிரமணியன் ஆகியோருக்கு ரூபி மனோகரன் எம்எல்ஏ பதவி நியமனம் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

    இந்த நிகழ்ச்சியில் ஜாபர், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் நாராயண ராஜா, செல்லப்பாண்டி, கலங்கரை யான், பீர் மஸ்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக அவர்கள் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    Next Story
    ×