search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குடும்பத்துடன் விஷம் குடித்த வங்கி மேலாளர் மனைவி பலி- 2 பேர் கவலைக்கிடம்

    ஒட்டன்சத்திரத்தில் கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்த வங்கி மேலாளரின் மனைவி பலியானார். மற்ற 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஒட்டன்சத்திரம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(59). இவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தங்கச்சியம்மாபட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உமாகோமதி(55). இவர்களது மகன் சிவபிரபாகரன்(28) என்ஜினீயரிங் பட்டதாரி. முத்துராமலிங்கம் தனது குடும்பத்துடன் ஆத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார். இவருக்கு கடன் தொல்லை இருந்ததால் தான் ஓய்வுபெற்ற பணத்தில் கடனை கட்டினார். இருந்தபோதும் கடன் முழுவதும் அடையவில்லை. மேலும் இவருக்கு டயாலிசிஸ் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துராமலிங்கம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி உணவில் விஷம் கலந்து கணவன்-மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் சாப்பிட்டனர். மேலும் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்களுக்கும் அதனை கொடுத்தனர். இதில் ஒரு நாய் உயிரிழந்தது. மற்றொரு நாய் குரைத்துக்கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் வந்து பார்த்தனர். கதவு திறக்கப்படாமல் இருந்ததால் ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே உமாகோமதி இறந்த நிலையில் கிடந்தார். முத்துராமலிங்கம் மற்றும் அவரது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து அவர்களை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் உமாகோமதியின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்கள் வீட்டில் இருந்த செல்போன், டைரி உள்ளிட்டவைகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×