search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்க 50 சதவீத புத்தகங்கள் வந்தன

    ராயபுரம் பள்ளியில் புத்தகங்கள் இறக்கிவைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது

    திருப்பூர்:

    1 முதல் 10-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 13-- தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் தயாராக உள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்1 முதல் பிளஸ் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 3 கோடியே 35 லட்சத்து 63 ஆயிரம் பாட புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூரில், உயர்நிலை பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளிக்கும், பிற வகுப்புகளுக்கு தாராபுரம், உடுமலை, பல்லடம், திருப்பூர் இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 சதவீத புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன.

    தொடக்க வகுப்புகளுக்கான புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அருகில் உள்ள பள்ளியில் இருப்பு வைத்து பிற பள்ளி மாணவர்களுக்கு வினியோகிப்பர். ராயபுரம் பள்ளியில் புத்தகங்கள் இறக்கி வைக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது. பள்ளி திறந்ததும் வினியோகிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×