search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி ஏலம்

    ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    மூலனூர்:

    மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 1073 பேர் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

    பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.15,877-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 580-க்கும், சராசரி விலையாக ரூ.12 ஆயிரத்து 230-க்கும் விற்பனையானது.

    பருத்தியின் மொத்த அளவு 9,432 மூட்டைகள், குவிண்டால் 3118.60. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 58 லட்சத்து 16 ஆயிரத்து 567-க்கு 21 வியா பாரிகள் மறைமுக ஏலத்தில் எடுத்தனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப் பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    Next Story
    ×