search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

    அனைவருக்கும் குழந்தை திருமண தடுப்பு, பாதுகாப்பு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம்:

    நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார்.

    இதில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் எஸ்.சுசீலா, உதவி விரிவாக்க அலுவலர்கள் சி.ஜோதியம்மாள், செ.அம்மாசை தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம், பெண் குழந்தைகளுக்கு திருமண வயது முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட வேண்டியதன் அவசியம், கட்டாய திருமணத்தை தடுக்கும் வழிமுறைகளை மாணவிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.

    முடிவில் அனைவருக்கும் குழந்தை திருமண தடுப்பு, பாதுகாப்பு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படடது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×