search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான தியாகராஜன்
    X
    கைதான தியாகராஜன்

    மதுரை வணிக வளாகத்தில் திருடிய வாலிபர் கைது

    மதுரை வணிக வளாகத்தில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    தல்லாகுளத்தில் வணிக வளாக அங்காடி இயங்கிவருகிறது. இங்கு அண்ணாநகர் செண்பக தோட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (33) வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். 

    நேற்று மதியம் அவர் கடையில் இருந்தார். அங்கு வந்த வாலிபர், முத்துக்குமாரின் கவனத்தைத் திசை திருப்பி இருந்த ரூ. 2,500 மற்றும் 2 செல்போன்களை திருடி சென்று விட்டார்.

    அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தார். அப்போது  ஒரு வாலிபர் கல்லா பெட்டியில் இருந்த  பணம் மற்றும் 2 செல்போன்களை திருடி செல்வது தெரியவந்தது.

    இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கண்காணிப்பு காமிரா காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

     இதில் குற்றவாளி பற்றிய அடையாளம் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பி.பி.குளம் பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் பி.பி.குளம், வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தியாகராஜன் (40) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×