என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விதிகளை மீறி இயங்கும் குவாரிகளுக்கு சீல் வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
Byமாலை மலர்18 May 2022 10:04 AM GMT (Updated: 18 May 2022 10:04 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கும் குவாரிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
நெல்லை:
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரியை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். அதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சமும், கல்குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியும் வழங்கவேண்டும்.
சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய கனிமவளத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் ஏராளமான கல் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளது. அந்த குவாரிகளில் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமாரிடம் அளித்தனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரியை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். அதில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.50 லட்சமும், கல்குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியும் வழங்கவேண்டும்.
சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய கனிமவளத்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் ஏராளமான கல் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளது. அந்த குவாரிகளில் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் குமாரிடம் அளித்தனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X