என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது- ஜி.கே.வாசன்
Byமாலை மலர்16 May 2022 9:20 AM GMT (Updated: 16 May 2022 9:20 AM GMT)
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இதனால் உலக அளவில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் புனிதர் பட்டத்துக்கு தகுதியானவர். காரணம் தென்னிந்தியாவில் பரவலாக ஒரு தியாகியாக கருதப்பட்டார். மேலும் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக தேவசகாயம் மேற்கொண்ட இறைப்பணிக்கும், மக்கள் நலப் பணிக்கும் கிடைத்திருக்கிற பட்டம் புனிதர் பட்டம். தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கியதால் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், ஏன் இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறது. உலக அளவில் தமிழ்நாட்டின் புகழ் பரவுகிறது.
புனிதத்துவத்தோடு வாழ்ந்து மறைந்த புனிதரான தேவ சகாயத்தின் புகழ் பரப்புவோம் என்று த.மா.கா. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாட்டிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இதனால் உலக அளவில் தமிழ்நாட்டிற்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் புனிதர் பட்டத்துக்கு தகுதியானவர். காரணம் தென்னிந்தியாவில் பரவலாக ஒரு தியாகியாக கருதப்பட்டார். மேலும் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக தேவசகாயம் மேற்கொண்ட இறைப்பணிக்கும், மக்கள் நலப் பணிக்கும் கிடைத்திருக்கிற பட்டம் புனிதர் பட்டம். தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கியதால் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், ஏன் இந்தியாவிற்கே பெருமை சேர்ந்திருக்கிறது. உலக அளவில் தமிழ்நாட்டின் புகழ் பரவுகிறது.
புனிதத்துவத்தோடு வாழ்ந்து மறைந்த புனிதரான தேவ சகாயத்தின் புகழ் பரப்புவோம் என்று த.மா.கா. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X