search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செவிலியர் தினத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    செவிலியர் தினத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் செந்தில் சேகர் தலைமை தாங்கினார்.

    டாக்டர்கள் கிருஷ்ணவேணி, வேலம்மாள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் கணபதி, கமலா முன்னிலை வகித்தனர். செவிலியர் ரமேஷ் வரவேற்றார். டாக்டர் ராஜாமணி தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதில் டாக்டர்கள் ரதிதேவி, உமாமகேஸ்வரி, செவிலியர் இந்திரா, இந்திய செஞ்சிலுவைச் சங்க தலைவர் ஹரிஹர சுப்பிரமணியன், செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் மற்றும் செவிலியர்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  செவிலியர் தங்கம் நன்றி கூறினார்.
    Next Story
    ×