என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி
பாலக்கோடு:
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து தற்போது இரை தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக வனப்பகுதிக்கு வருகின்றன,
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வனப்பகுதிகளில் சுற்றி திரியும் யானைகள், சில நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன. அங்குள்ள விவசாய பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, சானமாவு, அஞ்செட்டி, வேப்பனப்பள்ளி, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், மாரண்டஹள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு இரை தேடி வந்த மக்னா யானை , மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி அருகே உள்ள நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52), விவசாயியான இவர் தனதுசொந்தமான 4 ஏக்கரில் தென்னந்தோப்பில், நெல் கத்திரி ஆகியவை பயிரிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தனது நிலத்தை சுற்றிலும் மின்வேலியை அமைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு இரை தேடி 30 வயதுடைய மக்னா யானை மாரண்டஹள்ளி வனப்பகுதியில் இருந்து நல்லாம்பட்டி கிராமத்துக்கு வந்தது. அப்போது மக்னா யானை, சீனிவாசன் நிலத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த பயிர்களை காலால் மிதித்தும், தின்றும் நாசம் செய்தது.
அந்த சமயத்தில் திடீரென வயலில் இருந்த மின்வேலியை மக்னா யானை மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், மக்னா யானை மின்வேலியில் சிக்கி பலியாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் சீனிவாசன், அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்,
மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலியான சம்பவம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்