search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ்
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ்

    பதவி ஆசை இல்லை... மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே ஆசை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

    கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்க 2.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை பாடியில், திமுக ஆட்சியின் ஓராணடு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு, பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, கொரட்டூர் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்க 2.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பதவிக்காக ஆசைப்படவில்லை என்றும், தன்னை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றவே ஆசைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ‘10 வருடமாக எப்படி ஆட்சி நடைபெற்றது? இப்போது எப்படி ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது? என்பதை நீங்கள் கண்கூடாக பார்க்க வேண்டும் என்பதற்காக, சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
    Next Story
    ×