என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![குடிநீர் விநியோகம் குடிநீர் விநியோகம்](https://img.maalaimalar.com/Articles/2022/May/202205121530412431_Tamil_News_RAMANATHAPURAM-NEWS-Decided-to-distribute-drinking-water_SECVPF.gif)
X
குடிநீர் விநியோகம்
குடிநீர் விநியோகிக்க முடிவு
By
மாலை மலர்12 May 2022 10:00 AM GMT (Updated: 12 May 2022 10:00 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் தினமும் சுமாா் 780 லட்சம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்பட்டது.
தற்போது கோடைக்காலம் என்பதால் திருச்சி அருகேயுள்ள முக்கொம்பு பகுதியில் இருந்தே குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீா் அளவு குறைந்து விட்டது. அதனடிப்படையில் தற்போது சுமாா் 700 லட்சம் லிட்டா் தண்ணீரே ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிறது.
அதிலும் சுமாா் 100 லட்சம் லிட்டா் (1 கோடி லிட்டா்) தண்ணீா் வீணாகியும், விதி மீறி தனியாரால் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமநாத புரம் நகராட்சியில் தற்போது 3 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகிக்க ப்பட்டு வருகிறது. இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட த்துக்கான காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகத் திட்டத்தில் தற்போது குறைந்த அளவிலேயே தண்ணீா் வரத்து உள்ளது. எனவே ராமநாதபுரம் நகராட்சிக்கு வாரத்தில் 3 நாள்களும், அதேபோல பரமக்குடி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாரத்தில் 3 நாள்களும் என சுழற்சி முறையில் தண்ணீா் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவ ட்டத்துக்கு மேட்டூரிலிருந்து புதிய குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதுவரையில் ராமநாதபுரம் நகராட்சிக்குத் தேவையான குடிநீா் அளவை அதிகரிக்கும் வகையில் பொட்டிதட்டி கூட்டுக்குடிநீா் திட்டத்து க்கான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
அந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறை அதிகமிருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறி னர்.
நகராட்சி அதிகாரி களிடம் கேட்ட போது, நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்கு வதற்கு ஊரணிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அந்தந்தப் பகுதிகளில் குடிநீா் விநியோகிக்கப்பட உள்ளது.
அதுவரை 6 லாரிகள் மூலம் வாா்டுகளுக்கு தண்ணீா் விநியோகிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு லாரியிலும் சுமாா் 60 ஆயிரம் லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படும்.
எனவே கோடை காலத்தில் ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாது என்றனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)