என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை அதிபரின் மனைவியை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்12 May 2022 9:49 AM GMT (Updated: 12 May 2022 9:49 AM GMT)
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை அதிபரின் மனைவியை தாக்கி 7 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்தவர் போஸ்கோ. இவரது மனைவி சாயசித்ரா (வயது 52). இவர்கள் தூத்துக்குடியில் ரெடிமேட் ஜவுளிக் கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு கடையை அடைத்து விட்டு சாயசித்ரா தனது மகளுடன் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் புதிய பஸ் நிலையம் கடந்து சென்ற போது பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
திடீரென அவர்கள் சாயசித்ரா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதனால் நிலை தடுமாறிய தாய்-மகள் இருவரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர்.
உடனே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X