search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சலக கணக்குப் புத்தகங்களை பெற்றோர்களிடம் வழங்கிய காட்சி.
    X
    அஞ்சலக கணக்குப் புத்தகங்களை பெற்றோர்களிடம் வழங்கிய காட்சி.

    வாசுதேவநல்லூரில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

    வாசுதேவநல்லூர் கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியை சீதாலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜேம்ஸ் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட 20 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவராக வனிதா, துணைத் தலைவராக சசிகலா ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் இசக்கி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் லாவண்யா கலந்து கொண்டு பேசினார். மேலும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அஞ்சலக கணக்குப் புத்தகங்களை பெற்றோர்களிடம் வழங்கினார்.
    Next Story
    ×